
வலைப்பதிவு நண்பர்களுக்கு வணக்கம். உங்கள்முன் ஒரு புதியவன். அவனைப்பற்றி சொல்வதானால், வாழ்க்கைக்குள்ளே வாழ்க்கையை தேடிக்கொண்டிருக்கும் உன்னைப்போல் ஒருவன். மேகத்திற்குள்ளே நீர்த்துளியை தேடுவதைப்போல திறமைக்கான களத்தை தேடிக்கொண்டிருப்பவன். நிச்சயம் அந்த ஆடுகளம் புகுந்து அடித்து நொறுக்குவேன். தமிழ் மீதான அதீத பற்று எனது கையில் பேனாவை கொடுத்தது. வலைப்பதிவு என்ற உலகத்தை தனக்கே தெரியாமல் எனக்கு அறிமுகம் செய்த லோசன் அண்ணாவுக்கு எனது முதலாவது பதிவில் நன்றி கூற மறக்கவில்லை. இனி
உங்கள் வாசகனாக இருந்த ஒருவன், உங்களை வாசகனாக்க புறப்படுகிறான். ஒரு புதிய பக்கத்தில், ஒரு புதிய பேனா எழுத ஆரம்பிக்கிறது. உங்கள் வாழ்த்துக்களாலும், ஆசிகளாலும் அந்த பேனாவை நிரப்புங்கள்.
எனது உணர்வுகளும், எனது கற்பனைகளும், எனது கனவுகளும், எனது சுவடுகளும் தமிழ்க்காற்றை சுவாசிக்க, எனது உலகம் மெதுவாய் சுழல ஆரம்பிக்கிறது.....